Ad Widget

மிருசுவிலில் ஆயுதக்குழு அட்டகாசம்!

குறித்த நபரொருவரை வெட்டுவதற்காக ஆயுதங்களுடன் வருகை தந்த 15 பேர் அடங்கிய கும்பல் ஒன்று அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் அவ் பகுதியில் நின்றிருந்த மூவரை கடுமையாக தாக்கியுள்ளது.

இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் மிருசுவில் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் அதே இடத்தினை சேர்ந்த கே.மனோராஜ் (வயது 32) என்ற இளைஞனே படுகாயமடைந்தவராவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

ஒரு ஆட்டோ மூன்று மோட்டார் சைக்கிள்கள் சகிதம் அப்பகுதிக்கு வந்து இறங்கிய இனந்தெரியாத 15 பேர் அடங்கிய ஆயுதக் குழு மிருசுவில் பகுதியில் உள்ள ஒருவரை வெட்டுவதற்கு ஆயத்தமாகியுள்ளது.

எனினும் குறித்த நபர் வீட்டில் இல்லாத காரணத்தினால் அவ் இடத்தில் நின்ற மூன்று இளைஞர்களை அக்குழுவினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதன்போது அதில் ஒரு இளைஞன் படுகாயமடைய நேரிட்டது.இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts