Ad Widget

மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் மாரடைப்பால் மரணம்

வலி. தென்மேற்கு ( மானிப்பாய்) பிரதேச சபை தவிசாளர் சண்முகம் சிவகுமார் இன்று மாரடைப்பினால் காலமானார்.

sivakumar

நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் மானிப்பாய் கட்டுடையை வதிவிடமாகவும் கொண்ட இவர் ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் ஆவார். கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்குகளின் அடிப்படையில் உப தவிசாளராக பெறுப்பேற்றார்.

அதன்பின்னர் முன்னாள் தவிசாளர் ஜெபநேசன் பதவி விலகியதையடுத்து 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தியோக பூர்வமாக தவிசாளராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts