Ad Widget

மாதகல் காணி பறிபோனது

மாதகல் ஜோதிப்புலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 66 பரப்பு காணி கடற்படையினரிடம் பறிபோயுள்ளது.

கடற்படையினருக்கு காணியினை வழங்குவதற்கு குறித்த காணியின் உரிமையாளர் எழுத்து மூலமான சம்மதத்தினை வழங்கியதைத் தொடர்ந்து நில அளவைத் திணைக்களத்தினர் இன்றைய தினம் காணியினை அளவீடு செய்தனர்.

குறித்த காணியின் உரிமையாளர் மனமுவந்து காணியினை விற்பனை செய்ததால் அளவீடு செய்வதை யாரும் தடுக்க முடியாது என கடற்படையினர் தெரிவித்தனர்.

இதனை அங்கு நின்ற காணி உரிமையாளர் உறுதிப்படுத்தியதால் காணி அளவீட்டை தடுக்கச் சென்ற மக்களும், மாகாணசபை உறுப்பினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

நீண்ட காலமாக தமது நிலத்திலே கடற்படையினர் ஆக்கிரமித்திருந்தனர், அதனை எப்போது மீளஒப்படைப்பார்கள் என்று தெரியாமல் இருந்தது இந்நிலையில் காணியினை கடற்படையினருக்கே விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன் என காணியின் உரிமையாளர் குறிப்பிட்டார்.

Related Posts