Ad Widget

மஹிந்தவை இரகசியமாக சந்தித்து பேசினார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு(செவ்வாய்கிழமை) இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தல், புதிய கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய கூட்டணி தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொது ஜனப்பெரமுனவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மைத்திரியும், மஹிந்தவும் சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts