Ad Widget

மன்னார் மனித புதைகுழி- ஜேர்மன் தூதுவர் நேரடி விஜயம்!

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜார்ன் ரோட் நேரடியாக சென்று அவதானித்துள்ளார்.

பலத்த மழை காரணமாகவும், அரச பணி காரணமாகவும், மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டிருந்தன.

இந்நிலையில் 105 ஆவது நாளாக இன்று மீண்டும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மனித புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜார்ன் ரோட் நேரடியாக சென்று அவதானித்துள்ளதோடு, குறித்த அகழ்வு பணி தொடர்பாக உரிய விளக்கத்தையும், அகழ்வு பணிகள் தொடர்பில் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

தற்போது வரையில் 239 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவற்றில் 230 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்றைய அகழ்வு பணி தொடர்பில் செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குழு ஒன்றும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts