Ad Widget

மன்னாரில் சிறுமி துஷ்பிரயோகம்! இளைஞரைத் தண்டிக்குமாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார். பேசாலை உதயபுரம் கிராமத்தை சேர்ந்த 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் தனியார் வகுப்பிற்குச் சென்ற போது வீதியில் நின்ற இளைஞன் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

அங்கிருந்து தப்பித்துச் சென்ற சிறுமி, அருகிலுள்ள கடை ஒன்றிற்கு சென்று இதுபற்றி முறையிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதையடுடுத்து சந்தேக நபர் நேற்று இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தற்பொழுது மருத்துவ பரிசேதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, உதயபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நேற்று அதிகாலை குறித்த கிராம மக்களால் வங்காலைப்பாடு சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Related Posts