Ad Widget

மகிந்த-மோடி, அலைபேசியில் உரையாடல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகளையிட்டு நேற்று காலை அலைபேசி மூலம் உரையாடியதாக, நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

mahintha-modi

பேசப்பட்ட விடயங்களில், மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்கள் விடயம் மற்றும் காத்மண்டுவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் மோடியின் பிரசன்னம் ஆகியவையும் அடங்கியிருந்ததாக கூறப்பட்டது.

தடைகள் விதிக்கப்பட்ட மீனவர்கள், இந்திய சிறைகளில் தமது சிறைதண்டனையை அனுபவிப்பர் எனும் உடன்பாட்டுடன் கைதிகளை பரிமாறிக்கொள்ள ராஜபக்ஷ விரும்பியதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக தலைவர் வைகோ, மரணதண்டணை விதிக்கப்பட்ட மீனவர்களை வைத்து சிறுபிள்ளைத் தனமாக அரசியலில் ஈடுபடுகின்றார் என பாரதிய ஜனதா கட்சி கண்டித்துள்ளது.

மத்திய அரசு இலங்கையில் மரண தண்டனை பெற்ற தமிழ் மீனவர்களை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

சட்டநுட்பங்களை தெரிந்துகொண்டும் வைகோ இதை அரசியலாக்கி வருகின்றார் என தமிழ்நாடு மாநில ஜனதா கட்சி தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

Related Posts