Ad Widget

போலி கடவுச்சீட்டுடன் இலங்கை பெண்கள் இந்தியாவில் கைது!

போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தர முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கங்கா (46) மற்றும் சொர்ணகலா (22) என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பெண்களும் சென்னை முகவரியுடன் கூடிய இந்திய கடவுச்சீட்டையும் இலங்கைக்கான சுற்றுலா விசாவையும் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இருப்பினும், அதிகாரிகள் அவர்களின் தரவுத்தளத்தை சரிபார்த்தபோது, ​​​​அவர்களின் கடவுச்சீட்டு போலியானது என்பதைக் கண்டறிந்து பயணிகளை விமானத்தில் ஏற விடாமல் தடுத்துள்ளனர்.

விசாரணையில், குறித்த பெண்கள் இலங்கை பிரஜைகள் என்பதும், சுற்றுலா விசாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து தங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் போலி கடவுச்சீட்டு பெற முகவர் நிலையத்துக்கு பணம் கொடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைக்காக சென்னை பொலிஸ் மத்திய குற்றப்பிரிவின் போலி கடவுச்சீட்டு பிரிவில் குறித்த பெண்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts