Ad Widget

பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்துக்கு கோப்பாய் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் ஆதரவு

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்துக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய கலாசாலையில் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

மலையகத் தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பளம் கோரி தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு நாட்டின் பல இடங்களிலிருந்து பல்வேறு தரப்பினர்களும் தங்களது ஆதரவுகளை வழங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்களும், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று குறித்த போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது “உதிரத்தை உரமாக்கும் உயிர்களுக்காக போராடுவோம்” , “நீங்கள் குடிப்பது தேநீர் அல்ல மலையக மக்களின் உதிரமே!”, “தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாதே” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை ஆசிரிய மாணவர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts