Ad Widget

புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவரைத் தேடும் வேட்டை தொடர்கிறது

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளாரா என்பது குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக பாதுகாப்புத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற அந்த அணியைச் சேர்ந்த நபர்கள் தென்னிந்தியா போன்ற இடங்களில் இருந்து மீண்டும் நாட்டுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்துள்ளனரா என்பது பற்றி தாம் பல கோணங்களில் புலனாய்வு செய்து வருவதாக பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

குறிப்பாக மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியைச் சேர்ந்த ஜெயந்தன் படையணியில் தலைமைத்துவம் வகித்த முக்கிய நபர் ஒருவர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புத் தரப்பினர் உஷாரடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி

விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவர் படகு மூலம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார்

Related Posts