Ad Widget

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மற்றுமொரு முன்னாள் போராளி உயிரிழப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மற்றுமொரு முன்னாள் போராளி உயிரிழந்துள்ளார்.

சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் வசித்து வந்த இராசதுரை திக்சன் என்ற 26 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் வெலிக்கந்தை திருகோணமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டரை வருடங்களின் பின்னர் குறித்த இளைஞர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

Related Posts