Ad Widget

புதிய மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டம்

small-tree-in-handயாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணியின்போது அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நாட்டுவதற்கு வன விரிவாக்கல் திட்டத்தின் கீழ் வனவளத்திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பாடசாலைகள், வீதிகள், பொது இடங்களில் புதிய மரக்கன்றுகளை நாட்டுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட வனவளத் திணைக்கள அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக யாழ். மாவட்ட வனவளத் திணைக்கள அலுவலகத்தில் தேக்கு, மலைவேம்பு, மருது, இலுப்பை, பலா, மஹோக்கணி ஆகிய மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தேவையானவர்கள் தம்மோடு தொடர்பு கொண்டு தேவையான மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்

Related Posts