Ad Widget

புதிய அரசியலமைப்பின் தயாரிப்பு பணிகளை ஜனாதிபதியும் பிரதமரும் துரிதப்படுத்த வேண்டும் – கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பின் தயாரிப்பு பணிகளை ஜனாதிபதியும் பிரதமரும் துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த ஆட்சியை உருவாக்குவதற்கு மூல காரணமாக இருந்தது தமிழ் மக்களுடைய வாக்கு என்பது அமைச்சர்களுக்கு தெரிய வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியினை சேர்ந்தவர்களுக்கும் இது தெரிய வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

Related Posts