Ad Widget

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: இன்று தொகுப்புரைகள்!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொகுப்புரைக்காக இன்று செவ்வாய்கிழமை நீதாயவிளக்கம் ( ரயல் அட் பார் ) கூடவுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாயவிளக்கம் (ரயல் அட் பார் ) முறைமையில் நடைபெற்றவுள்ளது.

வழக்கு தொடுநர் தரப்பு சாட்சிப் பதிவுகள் , மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் ,இன்று இரு தரப்பின் தொகுப்புரைக்காக கூடவுள்ளது.

இன்றும் நாளையும் இரு தரப்பு தொகுப்புரைக்காகவும் மன்றினால் திகதியிடப்பட்டு உள்ளது.

இருதரப்பின் தொகுப்புரைகளும் முடிவடைந்த பின்னர் தீர்ப்பு வழங்குவதற்கான திகதியினை நீதிபதிகள் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts