தமிழ்நாடு சென்றுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றிரவு திருச்சி உள்ள பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.
மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் சென்னையில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முதலைமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழகம் சென்றுள்ளார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி சென்ற அவர் பின்னர் விராலிமலையில் உள்ள பிரேமானந்தா ஆசிரமத்துக்குச் சென்ற அவர் சிவன் ஆலயத்தில் தரிசனம் செய்துள்ளார்.
இதேவேளை பிரேமானந்தா ஆசிரமத்தில் நடைபெறும் பௌர்ணமி வழிபாட்டில் ஆண்டுக்கு ஒருமுறை சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வது வழக்கம். இருப்பினும் வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அவர் ஆசிரமத்துக்கு வந்துள்ளதாக ஆசிரம நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.