Ad Widget

பிரேசில் கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் விபத்து

பொலிவியாவில் இருந்து கொலம்பியாவிற்கு பயணித்த விமானம் மேடெல்ளின் பகுதியை அண்மித்த வேளை ஏற்பட்ட விபத்தின் காரணமாக சிலர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.

பிரேசில் கால்பந்து வீரர்கள் அடங்களாக 72 பயணிகள் மற்றும் 9 விமானப் பணியாளர்கள் அடங்கலாக 81 பேருடன் குறித்த விமானம் விபத்திற்கு முகம்கொடுத்துள்ளது.

குறித்த விபத்தின் போது விமானம் முற்றுலுமாக நொருங்கியுள்ளதாகவும், அதனால் பலமான உயிரிழப்புக்களுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், காயமடைந்தவர்களின் 10 பேர் வரை தற்போது உள்ளூர் வைத்தியாசலை ஒன்றில் சேர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

எவ்வாறான போதும், வைத்திய சாலையில் சிகிச்சைக்களா அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் வெளியாகவில்லை. மேலும், பயணித்த பிரேசில் கால்பந்து வீரர்கள் பற்றிய விபரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Related Posts