Ad Widget

பள்ளி தீ விபத்தில் 17 மாணவிகள் பலி

வடக்கு தாய்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவிகள் தங்கும் அறையில் தீ பரவி, தூங்கிக்கொண்டிருந்த குறைந்தது 17 மாணவிகள் கொல்லப்பட்டனர்.

fire_school_dormitory_in_northern_thailand

சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளியில், 6 லிருந்து 13 வயது கொண்ட பல மாணவிகள் தங்கியிருந்தார்கள்.

இதில், பெரும்பாலானவர்கள் மலைப் பகுதி பழங்குடியின கிராமங்களை சேர்ந்தவர்கள்.

இந்த தீ விபத்தில் 5க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.மேலும், இரு மாணவிகள் காணாமல் போயுள்ளனர்.

Related Posts