Ad Widget

பல்கலைக்கழகத்தில் தொடர்கிறது பாலியல் துன்புறுத்தல்!! இன்றும் ஒரு முறைப்பாடு பொலிஸில் பதிவு!!

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவி ஒருவருக்கு தொலைபேசி ஊடாக பகிடிவதை என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல் இடம்பெற்றமை தொடர்பாக தொலைபேசி இலக்கத்துடன் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகிடிவதை தொடர்பில் நிர்வாகத்தினரால் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பகிடிவதை தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை விசாரணை மேற்கொள்வதற்காக தொலைபேசி இலக்கத்தை ஆராய கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில் மற்றுமொரு முறைப்பாடு இன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts