பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளுக்காக, எதிர்காலத்தில் புதிய சட்டங்களைக் கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வியாழக்கிழமை )21) தெரிவித்தார்.
கொழும்பு, கலதாரி ஹோட்டலில் இன்று நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் இடம்பெறும் பகிடிவதை, பாலியல் மற்றும் பாலினச் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறும் துன்புறுத்தல்களைத் தடுப்படு தொடர்பிலேயே மேற்படி செயலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.