யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு நெற்களஞ்சியசாலையை நிர்மாணித்துள்ளனர் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வலப்பனை – நில்தண்டாஹின்ன பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் உரமானியத்தை இல்லாது செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை.
அத்துடன் அவர்கள் நிறுத்திக்கொள்ளவில்லை. ஒரு இலட்சம் வயல் நிலங்களில் பயிர் செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தினர்.
நெல் அதிகம் என்பதால் நெல்லை மத்தளை விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தினர்.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு நெற்களஞ்சியசாலையை நிர்மாணித்துள்ளனர்.
ஆனால், இந்த நாட்களில் அங்கே கடல் விமானத்தையே நிறுத்தி வைக்க முடியுமான அளவிற்கு நீர் நிரம்பியுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.