Ad Widget

பருத்தித்துறையில் ஒருவர் அடித்துக்கொலை!

பருத்தித்துறை, திக்கம் பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு(செவ்வாய்க்கிழமை) 8 மணியளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளானவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாச்சிமார் கோவிலடி, திக்கம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனது சகோதரனுக்கு வழங்கிய இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்வதற்கு சென்றபோது, ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த சந்தேகநபரும் பொலிஸ் பாதுகாப்புடன் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts