Ad Widget

பரந்தன் விபத்தில் கோப்பாய் இளைஞர்கள் மரணம்!

accidentவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இளைஞர்கள் இருவர் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அடுத்தடுத்துச் சென்ற டிப்பர் வாகனங்கள் இரண்டை முந்திச்செல்ல முற்பட்டவேளை முன்னால் சென்ற டிப்பருடன் மோதியதில் அருகில் இருந்த பாலத்துக்குள் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்ட நிலையில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

சடலங்கள் கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கிளிநொச்சிச் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இளைஞர்கள் இருவரும் கோப்பாயைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Posts