Ad Widget

படுகொலை செய்யப்பட்ட வித்யாவின் சகோதரிக்கு தொழில்வாய்ப்பு!

யாழ். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்யா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது நியமனத்தை நேற்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடருந்து பெற்றுக்கொண்டார்.

கடந்த வருடம் ஜனாதிபதி, மாணவி வித்தியாவின் வீட்டுக்கு சென்றிருந்த வேளை, அக்குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.

மாணவி வித்தியாவின் தாயாரான சரஸ்வதி சிவலோகநாதன் மற்றும் வித்தியா சிவலோகநாதன் மன்றத்தின் தலைவி பிரபல திரைப்பட கலைஞர் சுவினீதா வீரசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts