Ad Widget

நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு!

கோண்டாவில், அனலைதீவு ஆகிய பொது நூலகங்களுக்கு யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தினால் ஒருதொகுதி புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

book donet 8787876

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கோண்டாவில் பொது நூலகர் திருமதி கே.அனிதா, அனலைதீவு பொது நூலகர் திருமதி எஸ்.தர்மிலா ஆகியோரிடம் புத்தகத் தொகுதிகளை இந்திய துணைத் தூதரக பிரதித் தூதர் எஸ்.டி. மூர்த்தி வழங்கி வைத்தார்.

இலங்கை அரசு ஊடாக சிறந்த நூலகங்களுக்கான விருதுபெற்ற நூலகங்களுக்கு இந்திய துணைத் தூதரகம் புத்தகங்களை அன்பளிப்பு செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

யாழ் நூலகத்திற்கு இந்திய துணைத்தூதுவரால் புத்தகங்கள் பரிசளிப்பு!

Related Posts