Ad Widget

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார் ஜோசப் ஸ்டாலின்!

கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் தற்போது கோட்டை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சட்டத்தரணி ஜயந்த தெஹியத்தகே தெரிவித்துள்ளார்.

ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதையடுத்து, தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குழு ஒன்று கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க, இவ்வாறான கைதுகளின் மூலம் ஜனநாயகப் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts