Ad Widget

நாவாந்துறையில் மீண்டும் மோதல் : பொலிஸார் மீது தாக்குதல்

யாழ்.நாவாந்துறை பகுதியில் மீண்டும் குழு மோதல் மூண்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கடமையில் இருந்த இரு பொலிசாருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மைலோ கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் வெற்றியீட்டிய சென்.மேரிஷ் அணி நாவாந்துறை சந்திப் பகுதியில் நின்று தமது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அப் பகுதியிலுள்ளவர்களுக்கும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சென்.மேரிஷ் அணியினருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பினரும் கற்கள்,போத்தல்களை கொண்டு சண்டையிட்டதில் நாவாந்துறை பகுதியே பெரும் போர்க்களமாக மாறிய நிலையில் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இரு குழுக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிசார் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts