தன்னைவிட நாட்டை பற்றி சிந்தித்து செயற்படும் நபர்களே தற்போதைய தருணத்தில் நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிறந்த தாய்நாட்டின் மீது அன்பு செலுத்தும் நபர்களுக்கு எப்போதும் கெட்டது நடக்காதென ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் கல்வியாளர் ஆர்.எஸ்.டி.அலஸின் உருவச்சிலை திறந்து வைப்பு வைபவத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
முடியாது´ என்ற பதத்தை மனதில் இருந்து அகற்றினால் பின்னணி இன்றி எந்தவொரு நபராலும் வெற்றிபெற முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜாதிக ஹெல உறுமய பிரதி செயலாளர் உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.