Ad Widget

நாட்டில் தொடரும் குளிரான காலநிலை

நாட்டில் நிலவிவரும் குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்பரப்புக்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி காணப்படுமென தெரிவித்துள்ள அத்திணைக்களம், நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் குளிரான வானிலை நிலவி வருகின்றது.

சில பகுதிகளில் குறிப்பாக நுவரெலியா போன்ற மலைப்பகுதிகளில் பனியுடன் கூடிய காலநிலையே தொடர்ந்தும் நீடிக்கின்றது.

காலை வேளைகளில் பாடசாலைக்கு மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் பனி மூட்டம் காரணமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

Related Posts