Ad Widget

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதியுதவி!

உலக வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவியை வழங்கும் நோக்கில் 03 மாத கால வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் பந்துல திலகசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்த செயற்றிட்டத்தின் கீழ் குடும்பமொன்றுக்கு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்காக ஐந்தாயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாய் வரையான நிதி உதவி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts