Ad Widget

நாடு முழுதும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்?

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (12) மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அனைத்து பிரதேசங்களிலும் மாலையிலும் இரவிலும் சீரான அத்துடன் குளிரான காலநிலைக்கு சாத்தியம் நிலவும்.

அத்துடன் நாட்டைச்சூழவுள்ள வட,வடமேல் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரங்களில் காலையிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது எனவும் இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரையும் கவனமாக இருக்கும் படி வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரதான நகரங்களின் காலநிலை

அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 33 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 23 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு மாலையில் இடியுடன் கூடிய மழை காணப்படலாம். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 22 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் இடியுடன் கூடிய மழை காணப்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 31 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 23 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் காணப்படும். கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு இரவில் மழைக்கான சாத்தியம் காணப்படும்.

கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அநுராதபுரத்தில் இடியுடன் கூடிய மழையுடன் 30.3 செல்சியஸ் பாகையளவிலும் பதுளையில் 26.0 பண்டாரவளை பிரதேசத்தில் 24.7 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும்.
நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக இரத்தினபுரி; பிரதேசத்தில் 33.3 செல்சியஸ்பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 9.5 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.

ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம் சியம்பலாங்கமுவ பிரதேசத்தில் ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சியாக 44.5 மி.மீற்றர் பதியப்பட்டுள்ளது.

Related Posts