Ad Widget

நாடளாவிய ரீதியாக மழையுடன் கூடிய வானிலை நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என்று அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

பொத்துவில்லில் இருந்து மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் மழையோ சிறிதளவான மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-35 கிலோ மீற்றர் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும் என்றும், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-20 கிலோ மீற்றர் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts