Ad Widget

நன்றி தெரிவிக்கின்றார் வட மாகாண போக்குவரத்து அமைச்சர்

நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலிற்கு தங்களது பூரண ஆதரவை வழங்கிய தனியார் பேருந்துஉரிமையாளர்கள் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் விசேட நன்றிகளை தெரிவித்து நிற்கின்றார்.

மேலும் இந்த விடயங்கள் இத்தோடு மறக்கப்பட்டுவிடாது தொடர் நடவடிக்கைகளாக மேற்கொள்ள வேண்டும் என்றும், எல்லோரும் இந்த விடயத்தில் தொடர்ச்சியாக விழிப்போடு இருக்க வேண்டியது தேவையாக உள்ளது, எதிர் வரும்காலங்களிலும் இந்த விடயங்களில் நீதி கேட்டு போராட வேண்டிய தேவை காணப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகள் மட்டில் அதி கூடிய கவனம் செலுத்துமாறும், பெண் பிள்ளைகளை வீடுகளில் தனிமையில் விட்டு செல்வதை முடியுமானவரை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றார்.

Related Posts