யாழ்ப்பாணம், தொண்டைமானாறு கடல்நீரேரியிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வல்வெட்டித்துறை, சீனட்டியைச் சேர்ந்த சிவஞானம் சிவலோகநாதன் (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 22ஆம் திகதி தொடக்கம் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.