வடக்கு மற்றும் கிழக்கு வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்றையதினம் காலை இடம்பெற்றது.
வலி.வடக்கு பிரதேச செயலகத்தின் தென்மயிலை கிராம அலுவலர் பிரிவில் முதலாவது வீட்டுக்கான அடிக்கல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா நட்டார்.
இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், மேலதிக மாவட்டச் செயலர் சு.முரளிதரன், வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்றையதினம் 4 வீடுகளுக்கு அடிக்கல் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.