Ad Widget

தேர்தல் விஞ்ஞாபனத்தை அமுல்படுத்தும் சட்ட அதிகாரம் கூட்டமைப்பிற்கு கிடையாது – கெஹலிய ரம்புக்வெல்ல

khehali_16எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டினாலும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை அமுல்படுத்தும் சட்ட அதிகாரம் கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்பட்டாலும், அவற்றை அமுல்படுத்தும் சட்ட ரீதியான அதிகாரம் கிடையாது.

தேர்தல் காலத்தில் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கப்படும் வாக்குறுதிகளை எந்தவொரு கட்சியினாலும் நிறைவேற்ற முடியாது.

நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விஞ்ஞாபனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சிலர் முயற்சித்து வருவதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Posts