சாவகச்சேரி பகுதியில் இருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் மிதவாத குழுக்களின் செயற்பாடுகளாக இருக்கலாம் என, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்றைய சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என வெளியாகும் தகவல்களில் எந்தவொரு உண்மையும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தீவிரவாதம் தலைதூக்குவதாக வௌியான கருத்துக்கள் பொய்யானது எனவும், வெவ்வேறு ஊடகங்கள் மூலம் இந்த செய்தி திரிவுபடுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த பூமியை வெற்றி கொண்டாலும் மக்களின் மனதை கடந்த அரசாங்கத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை என குறிப்பிட்ட ரெஜினோல்ட் குரே, தமிழ் மக்களின் மனதை வென்ற தலைவர் மைத்திரிபால சிறிசேனவே எனவும் கூறியுள்ளார்.