தெல்லிப்பளை பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள பனங்காணியொன்றில் இருந்தே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கால்நடைகளை மேய்க்கச் சென்ற இளைஞர் ஒருவரே, இந்தச் சடலத்தைக் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சடலத்துக்கு அண்மையில் சாரம், செருப்புகள் என்பனவும் சிதறி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லை. இது கொலையாகவும் இருக்கலாம் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.