தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியைப் புனரமைப்பதற்கு யாழ். மாநகரசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகர சபையின் மாதாந்த அமர்வின் ஒத்திவைப்பு அமர்வு, இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களிலும் யாழ்ப்பாண மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.