Ad Widget

தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: யாழ்.பல்கலைகழக பதிவாளர்

யாழ். பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இவ் மோதல் சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து கலைபீடத்தின் நுன்கலை மற்றும் சட்ட பீடங்களை தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த 3ஆம், 4ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிக பல்கலைகழகத்துக்குள் நூழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விடுதிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக துனைவேந்தர், மாணவ ஆலோசகர்கள், ஒழுக்காற்றுத்துறையினர் கூடி ஆராய்ந்ததன் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை, இப் பிரச்சனை தொடர்பாக மீண்டும் விசாரணை நடாத்தி இதற்கு தீர்வு எடுக்கப்படும்” என கூறினார்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் கலைப்பீட 4ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts