Ad Widget

தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள்: சந்திரிக்கா

தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

வெயங்கோட பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள். என்றாலும் அமைச்சர்களும் சில அதிகாரிகளும் தவறு செய்தவர்களாக இருக்கலாம். எனினும் அவர்களை ஒன்றாக கொன்று ஒழித்து விட முடியாது. படிப்படியாகவே தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க முடியும். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் அதன் முன்னாள் ஆளுநர் உடனே வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

நிதி அமைச்சரும் பதிவியிலிருந்து நீக்கப்பட்டார். என்றாலும் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அவ்வாறு ஒரு தண்டனையும் வழங்கப்பட்டதில்லை. மஹிந்த ராஜபக்ஷவும் பல பில்லியன் கணக்கில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அது தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினால் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது” என கூறினார்.

Related Posts