தற்கொலை அங்கி விவகாரம்; மேலும் இருவர் விரைவில் கைதாவர்?

சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேக நபர்களை விரைவில் கைது செய்யவுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை அங்கி மீட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சந்தேக நபர்கள் பயணித்த இரண்டு வான்கள் உட்பட 8 வாகனங்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மன்னார் பகுதியைச் சேர்ந்த எட்வர்ட் ஜுலியட் என்ற இளைஞனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பயங்கரவார விசாரணைப் பிரிவை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவரிடம் பெற்ற வாக்குமூலத்திற்கு அமைவாக 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்படவிருப்பதாக அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related Posts