சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் இதுவரையில் 23 பேருக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் 8 பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வதாக கூறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பலர் முன்னாள் போராளிகள் என்றும், அவர்களில் சிலர் அரசாங்கத்தின் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த தற்கொலை அங்கி தொடர்பில் கைதாகியுள்ள பிரதான சந்தேகநபருடன் தொலைபேசியில் உரையாடினார்கள் என்ற குற்றச்சாட்டுக்காகவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் அவரது தொலைபேசி உரையாடலை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றத்திடம் இருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அனுமதி பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.