Ad Widget

தரம் 5 பரீட்சையில் சிக்கல், உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கவும் : கல்வி அமைச்சர்

இவ்வருடம் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாளிலுள்ள வினாவில், சிக்கல் காணப்படுவதாகவும் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளரிடம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார்.

கணித வினாத்தாளில் இரண்டாம் பகுதியில் 39 ஆவது வினா தொடர்பான விடையில் சிக்கல் காணப்படுவதாக விசனம் எழுந்துள்ளது.

தற்பொழுது விடைத்தாள் திருத்தும் பணியும் நிறைவடைந்துள்ளது. இதனால், இது தொடர்பிலான விசனம் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எந்தவொரு பிள்ளைக்கும் அநீதி இடம்பெறாதவாறு இப்பிரச்சினைக்கு தீர்வு தருமாறும் கல்வி அமைச்சர் அக்கோரிக்கையில் கூறியுள்ளார்.

Related Posts