Ad Widget

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஏன் எதிர்கட்சித் தலைவர் மௌனமாக இருக்கின்றார்?? : நாமல் ராஜபக்‌ஷ

தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகள் குறித்து ஏன் எதிர்கட்சித் தலைவர் மௌனமாக இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமல் இந்த கேள்வியை நேற்றய தினம் (செவ்வாய்க்கிழமை) தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவேற்றியுள்ளார்.

“அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதை காரணம் காட்டி தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை கோராது மௌனமாக இருக்க முடியாது என்பதை, மூத்த அரசியல்வாதி சம்பந்தன் ஐயா அவர்கள் ஏன் உணரவில்லை!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Posts