Ad Widget

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுலகத்தின் மீது தாக்குதல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள குறித்த அலுவலகத்தின் மீது நேற்று (புதன்கிழமை) இரவு 11 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்று கட்சியின் பெயர்ப்பலகையை அடித்து நொருக்கி சேதப்படுத்திச் சென்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது அலுவலகத்திற்குள் வயது முதிர்ந்த உறுப்பினர் ஒருவர் இருந்துள்ளார். எனினும், அச்சம் காரணமாக அவர் வெளியில் வராததோடு, குறித்த கும்பல் அங்கிருந்து சென்றபின்னர் கட்சியின் தலைமைக்கு அறிவித்துள்ளார். அதன் பின்னர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த எவ்வித தகவலும் கண்டறியப்படாத நிலையில், சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts