Ad Widget

தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை என்று மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநயக்க கூறியுள்ளார்.

வவுனியாவில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் ஒரே நிபந்தனை நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே என அனைவரும் ஒன்றாக வாழும் வேலைத்திட்டமே என்று அமைச்சர் கூறியுள்ளார்.

நிபந்தனைகளை முன்வைப்பது அடிப்படைவாதிகள் என்றும் நாட்டின் அபிவிருத்திக்கு தடை ஏற்படுத்துகின்ற நபர்கள் என்றும் மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநயக்க மேலும் கூறியுள்ளார்.

Related Posts