Ad Widget

தமிழ் கட்சிகள் சுயநலம் தவிர்த்து கொள்கை ரீதியிலாக ஒன்றுபட வேண்டும் : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் கட்சிகள் சுயநலத்திற்காக அன்றி கொள்கை ரீதியிலாக ஒன்றுபட வேண்டும் என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழில் செய்தியாளர்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நடைபெற்றுமுடிந்த தேர்தல் முடிவுகள் தமிழ், சிங்கள தலைவர்கள் தங்கள் குறைகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மக்கள் கட்சிகளின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்று ஒரு இயக்கமாய் ஒன்றிணைந்து உரிமைகளை பெற அகிம்சை வழியில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தமிழ் தலைமைகள் கட்சி பாகுபாடின்றி கொள்கையால் ஒன்றுபட்டு, எமது கருத்துக்களையும், கஷ்டங்களையும் அரசாங்கத்திற்கு எடுத்துரைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Related Posts