Ad Widget

தமிழர்களை ஊமையாக்க பேரினவாதிகள் முயற்சி

சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களின் மனங்களை மௌனமாக்கி ஒரு சிதைத்த நிலைக்கு வைத்துக்கொண்டு தங்களுடைய ஆக்கிரமிப்பு வார்த்தைகளாலும் ,இனவாத கருத்துக்களாலும் தமிழ் மக்களை மௌனநிலைக்கு தள்ள முனைகின்றனர். ஆனால் இது சாத்தியப்படாத ஒன்றாகும்.என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

Kopay-4

வளலாய் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று காலை 8மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு முன்னால் நடாத்தினர் இதன்போது கருத்து தெரிவிக்கையிவே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர்தமிழ்மக்களிடம் மேற்கொள்ளப்பட்டது இன அழிப்பு யுத்தமே சிங்களவர்களுடன் தமிழ்ர்கள் சேர்ந்து வாழப்போவதில்லை என்பதையும் தமிழ் மக்கள் தெளிவுபடுத்தியுமுள்ளனர்.நீங்கள் தமிழர்களுடைய வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பொதுவான வாக்கெடுப்பினை எடுத்து பாருங்கள் சிங்களவர்களுடன் தாம் சேர்ந்து வாழப் போவதில்லை என்பதையே தமிழ் மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும் சொந்த மக்கள் தமதுசொந்த காணியிலே இருக்க முடியாதநிலைக்குத் தள்ளப்பட்டு வீதியில் நின்று போராட்டங்களை நடாத்தும் இவர்கள் மத்தியில் சிங்களவர்களை வலுக்கட்டாயமாக குடியேற்றும் இந்த காரியங்களுக்கு எதிராக போராடுவோம் அத்துடன் நாங்கள் அறவழியிலே தமிழ் மக்களின் இருப்புக்காகப் போராடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts