Ad Widget

தன்னையும் கைதுசெய்யலாம்- மஹிந்த

எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் தன்னைக் கைதுசெய்யலாம் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சென்றால் நாமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, விமல் வீரவங்க, ரோஹித அபேகுணவர்த்தன, குமார வெல்கம ஆகியோரைக் கைதுசெய்த பின், இறுதியாக தான் கைதுசெய்யப்படலாம் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (28) தலதா மாளிகைக்கு சென்ற அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இவை அனைத்தும் அரசியல் காரணங்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts