Ad Widget

தந்தையின் பதவி நிரந்தரமில்லை என்கிறார் மைத்திரியின் மகள் சதுரிக்கா!

தனது தந்தையின் பதவி நிரந்தரமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார்.

Chathurika-Sirisena-maith-doughterஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி இருந்தன.

தந்தைக்கு இணையாக அவரது மகள் சத்துரிக்கா, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தனது தந்தையின் ஜனாதிபதி பதவி நிரந்தரமில்லை என்று அவரின் மகளான சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று இருக்கும் பதவி நாளை இல்லாமல் போகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது தந்தையின் பதவி நிரந்தரம் இல்லை என்பதனால் சமூகத்திற்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு தனது முழு குடும்பமும் சமூக சேவையில் ஈடுபடுகின்றது என்று அவர் கூறியுள்ளார்.

“ஜாதி, மதம், பேதம் பாராமல் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு வலுச் சேர்ப்போம். 2020 ஆம் ஆண்டு வரும் போது எமது நாட்டை மது அற்ற நாடாக உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாத பயிர்க்செய்கைகளை மேற்கொண்டு சிறுநீரக நோய்களில் இருந்து எங்கள் நாட்டு மக்களை காப்பாற்றி கொள்வதே எங்கள் நோக்கம்” – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

120 விவசாயிகளுக்கு உர நிவாரணம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related Posts